இரத்த அழுத்தம் பற்றிய இவற்றை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

.


  ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'இரத்த அழுத்த நோய்' அல்லது 'இரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் அதாவது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

 ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். பொதுவாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம். இந்த இரத்த அழுத்தம் சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

இந்த வீடியோவில் சாப்பிடக்கூடாத உணவுகள், சாப்பிட வேண்டிய உணவுகள்,இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்கும் வீட்டு வைத்தியம் ஒன்றையும் பார்க்கபோகிறோம்.


காலை உணவை காண்டிப்பாக சாப்பிட வேண்டும். பொட்டாசியம் மக்னீசியம் நிறைந்த காய்களான  வெண்டைக்காய், கருப்பு பீன்ஸ், பூசணி விதைகள், சிறிய வெங்காயம் ,வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், beetroot ,முருங்கைக் கீரை, கறிவேப்பிலை நெல்லிக்காய், போன்றவற்றை  அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.,  இயற்கை உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். மூலிகைத் தேநீர், கிரீன் டீ இவைகளை எடுத்துக் கொள்ளலாம் பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, மாதுளம் பழம், வாழைப்பழம் இவற்றை சாப்பிடவேண்டும்.

உப்பைத் தவிர்த்து விடுங்கள், ஊறுகாயைத் தவிர்த்து விடுங்கள், புட்டிகளில் அடைக்கப் பட்ட உணவுகள், பதப் படுத்தப் பட்ட மற்றும் குளிர்விக்கப் பட்ட உணவு வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.புகை பிடிப்பது மது அருந்துவது கூடாது.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ போன்றவற்றை குறைத்து கொள்வது நல்லது.

உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.  அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு. ம ன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், தீரா சிந்தனை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
.
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் குணமாகும். அடுத்து இரவில் பூண்டு பால் சாப்பிட்டாலும் இரத்த அழுத்தம் கட்டுபாட்டில் இருக்கும்.
முக்கியமாக உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் கண்டிப்பாக walking செல்ல வேண்டும்.

இரத்த அழுத்தம் பற்றிய இவற்றை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் பற்றிய இவற்றை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். Reviewed by Nalampera on 14:56:00 Rating: 5
Powered by Blogger.