வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கொழுப்புக்கள் தான். உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும்.அந்த வகையில் தொப்பையை குறைக்கும் எளிதாக செய்ய கூடிய இரண்டு யோக பயிர்ச்சிகளை இங்கே பார்க்கபோகிறோம்.இதை செய்ய வெறும் ஐந்து நிமிடம் போதும். தொடந்து செய்துட்டு வந்தீங்கன்னா கண்டிப்பாக தொப்பை குறையும் .


புஜங்காசனம் செய்முறை:


விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும். கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள். இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும்.

இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள். இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். . உடல் பார்ப்பதற்கு ஒரு பாம்பு  படம் எடுத்து நிற்பது போல் இருக்கும். எனவேதான் இதற்குப் பெயர் புஜங்காசனம். இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 10 விநாடிகள் சுவாசத்தை நிறுத்தி அப்படியே இருக்க வேண்டும். 

பின்பு சுவாசத்தை வெளியேற்றி  படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். உடலை முழுவதுமாக ரிலாக்ஸ் செய்யவும்.
இப்படி 3-5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம். இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால்,   வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். முக்கியமாக இதை தொடந்து செய்து வரும்போது தொப்பை இருந்த இடமே தெரியாது.மேலும் முதுகெலும்பு  பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம் பெண்களின் இனப்பெருக்க  உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.. மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கி விடும்.

தனுராசனம் தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் வயிற்றுக் கொழுப்புக்களும், தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் அகன்று விடும்.

செய்யும் முறை இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, படத்தில் காட்டியவாறு உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் செய்ய வேண்டாம்.
தினமும் காலை மாலை இரண்டு வேலை செய்தால் தொப்பையை ஈசியாக குறைக்கலாம்.இந்த பயிர்ச்சியை ஆரம்பித்தில் 5 முறையில் ஆரம்பித்து பின்பு செய்யும் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள வேண்டும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்..


Reviewed by Nalampera on 16:16:00 Rating: 5
Powered by Blogger.